நாளைய தூண்கள்…


இடங்கள்
தீர்மானிப்பதில்லை.
மடங்களில்
தவழ்ந்தவனும்
நிமிர்ந்திருக்கின்றான்..!

திடம்
ஒன்று தான்
புடம்
போடுகின்றது.!
நம்பிக்கை
ஒன்று தான்
நலன்
காக்கின்றது..!

வல்லவனுக்கு
புல்லும்
ஆயுதம் என்பது
இடம் பொருள்
ஏவல் அறிந்து
முடியும்
என்ற தன்
நம்பிக்கையில்
உருவானது.!

தொழுவத்தில்
இவன் தொடக்க
கல்வி தளைத்திட
நாளை ஒரு
வேளை வெள்ளை
மாளிகையில்
விருந்துக்கு
அழைப்பு வரலாம்…!

ரி.தயாநிதி