நிஜமாகுமா….!கவிதை.ரதிமோ

 

மூடிய விழிகள்
முடிந்து போன கதை
சொல்லுமா……

தொலைத்த காலங்கள்
தொலைந்த உறவுகள்
மீண்டும் வருமா……

குருதி தோய்ந்த மண்ணில்
குழந்தைகளின் கனவுகள்
நிஜமாகுமா…….

துன்பமும் துயரமும்
நிரந்தரமாகிப்போன
நம்மவர் வாழ்வில்
ஒளி வருமா.,,,.

அன்பினால் பண்பினால்
அனைவரும் ஒன்றிணைந்த
புதுயுகம் ஒன்று
தோன்றுமா…..

ஆக்கம் ரதிமோகன்