நினைவுகளில்..!கவிதை கவிஞர் தயாநிதி

 

சுட்டதோ
சுடாததோ
ஊதி ஊதிக்
குடித்த நாட்கள்;..

அழகிய
கைவேலை
கோவிலில்
கஞ்சிக்கும்
கொட்டிலில்
கள்ளுக்கும்
ஏந்திய நாட்கள்;.;

வீட்டினில்
கூழுக்கும்
கூடிக் குலவி
குடித்த
இனிய நாட்கள்..

பனையின்
வளங்களில்
பலவகை
எம்மோடு
பயணித்த
அந்த நாட்கள்..!

பிளாஸ்ரிக்கின்
வருகையால்
உடலுக்கும்
உள்ளத்துக்கும்
மண்ணிண்
வளத்துக்கும்
நாட்டுக்கும்
பெரும் சேதம்..!

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken