நினைவுக்காய் நில்லுங்கள்”

நேற்று நள்ளிரவு என் கனவில்
நெற்றி நடுவே, முழுமதி வடிவில்
குங்குமப் பொட்டோடும், மாங்கல்யத்தோடும்
மதிவதனி அக்கா வந்தார்…

பிரிவுற்று நிற்கும் பலரையும் பார்த்து
தெரிவித்தார் ஒரு சேதி!!!

“என் மதியெட்ட நானும் அறியவில்லை
விதிமுடிந்து போனார் இவர் என்று…
வருவார், அவர் வருவார்
வேளை வரும்போது அவர் வருவார் என்றும்,
கருவைக் கலைக்காது காத்து நில்லுங்கள்
ஒருவர்கொருவர் கை கோர்த்து நில்லுங்கள்.

அழிவும் அவலமும் தந்த மாற்றானின்
அரசியல் நலனுக்காயல்லாது,
உனக்காய், உறவுக்காய் உயிர் நீர்த்தார்
நினைவுக்காய் நில்லுங்கள்” என்றார்..

ஆக்கம் வன்னியூர் குரூஸ்