நின்மதி தருகிறது!கவிதை சுதாகரன் சுதர்சன்

 

ஒரு நேர சோற்றுக்கு
அலைந்த காலமது
மற்றவரை நம்பி
ஏமாந்து போன காலமது
நினைத்தாலே வலிக்கிறது
எத்தனை ஏமாற்றம்
எத்தனை சுமைகள்
எல்லாமே பதிவிட்டது
என் வாழ்வில்
கறுப்பு புள்ளி ஒன்றை

இன்று……..
கொஞ்சம்
நின்மதி அடைகிறேன்
சொந்த உழைப்பில்
சாப்பாடு
ஒரு வேளை உண்டாலும்
நின்மதி தருகிறது
சொந்த தேசம்
இல்லை என்றாலும்
அயல் தேசத்தில்
சுயமாக வழ்கிறோம்
என்ற மன அமைதி கிடைக்கிறது.

ஒரு பருக்கை சோறு கையால்
உண்டாலும்
பசி ஆறும்
அந்த பாசமே
வேசமாகினால்
அதுவும் விசம் தானே
யாரும் இல்லை
என்றாலும்
மன உறுதி இன்று
என்னுடன் சொத்தாக இருக்கிறது
விழ விடமாட்டேன்
என்கின்ற மன உறுதி

ஆக்கம் சுதாகரன்  சுதர்சன்

Merken