நிறை குடம்.


எனை
கடந்த கனவுகள்
உடைந்த
பானைகளாயின..

வாழும்
காலத்தில் வாய்த்த
வரமானதால்
கை மேல்
வீணையானது..

மீட்காத
வீணையானதில்
விரல்களுக்கும்
வேதனை..

மன வானில்
நீந்தும்
நட்சத்திரம்
நீ என்பது
மெய்யானது..

உன் விழியழகில்
மொழியழகினை
கண்டு களிப்பவன்
இதழ் வழி பொழியும்
தமிழுக்கு சரணாக்கியது.

பேச்சிலும்
மூச்சிலும்
நித்தமும் தமிழ்
ஊற்றாகும்
விந்தையால்
சிந்தை நிறைத்தவள்..

வடிக்கும்
வரிகளில்
தத்துவங்கள்
தடம் பதிக்கும்..

நிறை
குடம் நீ
நிரந்தர இடம்
தா வடமாகலாம்.