நிலவு சுடுகிறது!கவிதை ஜெசுதா யோ

நிலவு சுடுகிறது
நினைவுகள் மட்டுமே
என்னுள் இருக்க
நிஜம் எல்லாம்
நிழலாகிப் போனது

உன்னைப் பார்த்த விம்பம்
என் கண்முன்னே விரிகிறது
கண்ணீர் மட்டுமே என்னைமீறி
கரைபுரண்டோடுகிறது

கனவுகள் பல கண்டேன்
காத்திருப்புக் கூட சுகமென்றேன்
காலம் பிரிக்கும் என்று
கனவிலும் எண்ணவில்லையே

மாலையில் என் விழிகள்
மரத்தடி நிழல் தேடிய போதும்
வானம் பார்த்தால்
வந்துவிடும் நிலாவாக உன் நினைவுகள்

உன்னை மறக்கமுடியாது
உளலும் இதயத்தோடு
ஒட்டிய மேனியுடன்
ஒதுங்கி வாழ்கிறேன்
நிலவு சுட்டுவிடுமென்றே..//

ஆக்கம் ஜெசுதா யோ