நிலை…..கவிஞர் தயாநிதி

கணமேனும்
காணாத போது
விரும்பியணைக்கும்
தனிமை தான்
துன்ப நிலை.

நேற்றுப் போல
எல்லாமே நீள
வேற்றுக் கிரகத்தில்
புதிய பரணாம பறப்பு.

ஆனாலும்
காற்றுப் போல
கண்களுக்கு
தெரியாமல்
உயிர்ப்புடன்….

அந்த நிலையை
சித்தர்கள் யோக
நிலையென்பர்
ஞானிகள் முத்தி
நிலையென்பர்.
உண்மையதுவல்ல..

உணர்வுகளால்
ஒன்றித்து மனங்களால்
பேசிடும் மௌன நிலை
உன்னை என்னை
மறந்த நிலையெதுவோ
அதுவே காதல் நிலை…

ஆக்கம் கவிஞர்தயாநிதி