நீயாயிரு…


தீயாயிரு
புயலாயிரு
கடலாயிரு
காற்றாயிரு
வானமாயிரு..
இயல்பாயிரு
இன்பமாயிரு
இடரின்றியிரு
இணைந்திரு
கனிவாயிரு
கவிதையாயிரு.
பணிவாயிரு
துணிவாயிரு
பூவாயிரு
பூவையாயிரு
எதுவாயுமிரு
பாரில் எழுதாத
விதியிது காண்.
ஆனாலும்
வாழ்வில்
வையம்
உன்னோடே
இருந்திட
உறவாயிரு
உயிராயிரு
உனக்காயுமிரு..
நீ..நீயுமாயிரு..

கவிஞர் ரி.தயாநிதி