நீயும் நானும் !

நீயும் நானும் நிழலாய் தொடர்வோம்
நிசமாய் வாழ வழியது கிடைக்கும்
பாசம் அன்பு அணைப்பில் நாமே
பண்பில் உயர்ந்து சிகரமாவோம்

வாசம் வீசும் வண்ண மலராய்
வாழ்வில் சுதந்திரம் கண்டு நாம்
நேசம் நெருக்கம் கொண்டே உலகில்
நேர்மையாக வாழ்ந்திடத் துணிவோம்

காதல் வலையில் காலம் முழுவதும்
சாதல் செய்யச் சரித்திரமாய் எழுவோம்
மோதல் இல்லா வாழ்வினிலே
மோகனப் புன்னகை உதிர்த்து வாழ்வோம்

துளிர்க்கும் காதல் பரப்பினிலே
தெளிக்கும் நீரை மழையாக்கி
சாரல் மழையில் நனைந்திட்டே
சாதனை படைக்கத் துணிந்திடுவோம்

நகுலா சிவநாதன்