நீரின்றி அமையாது உலகம்…!கவிதை கவித்தென்றல் ஏரூர்

உயிரினங்கள் வாழ்வதற்கு நீரே அவயம்
உலகில் நீரின்றி அமையாது எதுவும்
உழவனுக்கு உயிர் கொடுக்கும் அமுதம்
உடலுறுப்பில் உனை வளர்க்க உதவும்

ஒரு வேளை உணவாகும் உயிர் வாழ – நீரை
உணவாக உட்கொள்ளும் உலகில் பல ஏழை
மருந்தாக பரிமாறும் பலர் இந்நீரை
அருந்தாதோர் உள்ளாரோ நீ கூற

மகத்தான ஓர் திரவியம்
மழையாக விழும் ஓவியம்
மண்ணில் காத்திடும் பவ்வியம்
மறுக்க நினைத்தால் நீ பைத்தியம்

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்