நீ வருவாயென நானிருந்தேன் !கவிதை ஜெசுதா யோ

கிழக்கு வானம் சிவந்தெழ
ஆதவன் வருகை மேலெழ
விடியல் பிறக்கும் பொழுது
தூங்காது நானும் இருந்தேன்
நீ வருவாயென தவமிருந்தேன்

நிமிடங்கள் தாண்டியும்
மணிகள் பல கடந்தும்
கற்பனைகள் கொடிகட்டிப்பறக்க
காதல் நெஞ்சில் சுரக்க
காத்திருந்தேன் நீ வருவாயென

வாசலி மணியோசை
வருவது நீயேன எண்ணியே
பலமுறை ஓடியோடி நானும்
பார்த்த விழி நோக
பாவைநான் காத்திருந்தேன்
நீ வருவாயென

பொழு நகர்ந்து
இரவும் வந்தது
இன்னும் காத்திருக்கேன்
எண்ணற்ற நம்பிக்கை
என் இதயத்தில் சுமந்தபடி
நீ வருவாயேன நானிருக்கேன்

வருகின்ற விடியலில்
வருவாயா என்னவனே
உன்னையெண்ணி
உறங்காது நானிருக்கேன்
நீ வருவாயென
வந்து முகம் காட்டிப்போ
வாடிய என் வதனம் மலர்ந்திடவே

ஆக்கம் ஜெசுதா யோ