நுழைவது..1


சாவிக்கும்
சுத்தியலுக்கும்
மோதல்…
சுத்தியல்..
ஓங்கி
அடிக்கும்
வலிமை என்னிடம்.
சாவி..
பலசாலி
என்பதுன்
பகல் கனவு.
சேதமின்றி
பூட்டை திறந்திட
உன்னால் முடிவதில்லை…
உன்னிடம்
அமைதியில்லை
அதனால்
உச்சம்
தலையிலடிப்பது
உன்முறை..
என் தொடுகை..
இதயத்திலே
இயம்பியது சாவி..
வன்
முறையில்லை
நேயத் தொடுகை…
கோரம்
தவிர் ஈரம்
சுரக்கும் இதயத்தில்…
காதல்
பிறக்கும்
வாழ்க்கை சிறக்கும்..

 

ரி.தயாநிதி