நெஞ்சம் மறக்குமா..?

மறத்தமிழனின்
மைந்தனே
தமிழீழத் தலைவனின்
செல்வனே
வீரத்தின் விளைச்சலே..
அஞ்சினவன்
கண்களுக்கு சிம்ம
சொர்ப்பனமானவனே
மார்பினில நீ தாங்கிய
குண்டுகள் நீ வீரனின்
பிள்ளையென்று சொல்லுமடா..
விழிகளில்
பயம் காட்டாத
பாலகனே. எதுவரினும்
என ஏங்காது வானம்
நோக்கி நின்றாய்…
ஒற்றைத் தலைவனாய்
ஓர்மம் நிறைந்தவனாய்
வையம் மிரள படை
நகர்த்திய கோமகனின்
தொப்புள் கொடியுனையழிக்க
அச்சமொன்றே காரணமடா…
தந்தை தொடக்கியதை
முடித்து வைப்பாயென்ற
போரச்சமே அவர்கள் பயம்.
விதையாகி விருட்ஷமானவனே
வீரத்தின் மறுபெயர்
பாலச்சந்திரன் என்பதே மெய்..
வாழ்க நின் நாமம்..

ஆக்கம் கவிஞர் தயாநிதி