பதியம்…கவிதை கவிஞர் தயாநிதி

 

பூட்டி
வைத்த
இதயங்களும்
ஈரமின்றி
இருப்பதில்லை.

பாலை
வனங்களிலும்
பூக்கள்
பூத்து சோலை
வனங்களாவதில்
விஜர்ப்பில்லை..

கருணையால்
வருவதல்ல
காதல்..
அன்பினால்
அமைவதல்ல
காதல்..
முரண்பாடுகளும்
உடன்படாமல்
விடுவதில்லை,

புரிதலால்
பிறக்கும்
நேசங்களின்
உச்சத்திலிருந்து
உள்ளத்திலிறங்கி
வாசம் பரப்புவதே
உண்மைக் காதல்..

வார்த்தைகளால்
வண்ண வரிகளால்
எண்ணங்களை திணித்து
வளைத்து பிடிப்பதல்ல.
கட்டாயக் காதல்…
இதயங்களின்
ஈர்ப்பில் முளை விடும்
பதியமே நிஜமான காதல்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி