பனியில் நனைந்திடலாம்

ஒரு முறைதான்
உனைப் பார்த்தனே
எனை மறந்தேன் நான்….
இதயமதை உனக்காகவே
தர இசைந்தேன் நான்….
வாழ்வினில் யோகமே வந்ததேதான்
வானில் தாவுதே சிந்தையும்தான்
பனியில் நனைந்திடலாம் நாமும்
நதியில் நடந்திடலாம் நாமும்
நிலவை உரசிடலாம் வானில்
உலகை வலம்வரலாம் தேரில்
உன் தேவி நானாவேன்
உயிராக உனைப் பார்ப்பேன்
உன் பார்வை கொஞ்சம் என்னில் விழுமா
தனிமை தவிர்த்திடுவேன் நானே
இனிமை அளித்திடுவேன் நாளும்
குளிரைப் போக்கிடுவேன் நானே
மலரை மணந்திடவே நீ வா
என் தேவன் நீதானே
இரவுக் குறியை எதிர்பார்ப்பேன்
உன் வரவின் செய்தி எனக்கு வருமா

கோவிலூர் செல்வராஜன்