பன்முக ஆளுமையாளரான திரு தர்மன் தர்மகுலசிங்கம் அவர்களின் மணிவிழா

பன்முக ஆளுமையாளரான திரு தர்மன் தர்மகுலசிங்கம் இன்று வயன் (vejen) மாநகரில் தனது மணிவிழாவைக் கொண்டாடுவதோடு மணிவிழாமலரையும் வெளியிட்டு  தமிழ்புகழ் என்று பட்டத்தை அளித்து கௌரவப்படுத்தப்பட்டது.
புகழ் என்பது அவரவர் செய்கின்ற செயல்களில் எதிரொலியே அற்கேற்ப பல்துறை சார்ந்த ஆளுமைகளின் வாழ்த்தும் உரைகளும் இடம்பெற்றன.

அத்தோடு நூல் அறிமுகமாக T.சௌந்தர் எழுதிய  தமிழ்சினிமா இசையில் இகத்தூண்டுதல் என்ற நூலும் மற்றும் கோவிலூர் செல்வராஜன் எழுதிய ஊருக்குத் திரும்பணும்  என்ற சிறுகதைத் தொகுப்பும் அறிமுகம் செய்யப்பட்டது.

நல்ல ஒரு இலக்கிய விழாவில் கலந்து சிறப்பித்து
வாழ்த்துரை வழங்கியதில் நிறைவு.
„எங்கு நடப்பட்டாலும் அங்கே மலராகு“
என்றும் உங்கள் சமூக இலக்கியப் பணி தொடர நல்வாழ்த்துக்கள்.

13.05.17
சுபாரஞ்சன்