பற்றாளன்…

படித்த பள்ளியை
பழகிய தோழர்களை
பற்றோடு தேடி தங்கள்
நட்பினை புதுப்பித்தவன்.

சென் பத்திரியர் கல்லூரியில்
சிறுவயதில் ஒன்றாக
தன்னோடு கற்றவர்களை
ஐம்பது வயதில் ஒன்றாக்கி
கூடி மகிழந்த கூட்டத்தில்
சத்தியாவும் ஒருவன்..

அறிவிப்பாளன்.நடிகன்
கவிஞன் என பல் துறையாளன்.
அன்பாக அழைத்து எங்களையும்
இணைத்து இயக்கி நடிக்க
இவன் எடுத்த முயற்சி
எட்டாமல் போனது கவலை…

இவன் அறிவிப்பில்
இவன் துணைவியார்
மற்றும் மகள் அரங்கேறி
பாடியமை அற்புத காட்சிகளாக
அமைவதை கண்டவன்.
இசை ஞானம் நிறைந்த
மகளை வரமாகப் பெற்றவன்
தளங்கள் அமைந்து இவர்களும்
வானுயர வேண்டுமென
வாழ்த்துவோம் வாருங்கள்…

ஆக்கம் கவிஞர்தயாநிதி