பாதை……!கவிதை

 

அந்தப் பெரிய
கண்டமெல்லாம்
அகலவே திறந்து கிடக்கிறது
அகதிக்கான பாதை……!!!!

ஊர் முடக்கெங்கும்
அபாய வார்த்தைகள்
அப்பிப் கிடக்கிறது ……!!!

மகனே,
எங்காவது போய்
அங்காவது வாழ்ந்திடு என
அழுது அழுது அனுப்பிய
முகங்களை எப்போது பார்ப்பது…??

இன்னும்,
விதித்த பாதையில்
நடந்து கொண்டிருக்கின்றேன்
அகதியாய் …….

சுவிற்சர்லாந்து பேரழகோடு
அமைதியாய்
இருக்கிறது…….

ஆக்கம்  சுபாரஞ்சன்