பார்த்திருக்கிறேன்

உன்னை நான்
உன் முழு அனுமதியுடன்
உருவப் படத்தில்தான்
பார்த்திருக்கிறேன்
நான்கு வருடங்கள்
நரகமாய் நகரத்தில்
கடந்தபின்
இப்போதுதான் உணருகிறேன்
உன் அடி மனதில்
நான் அப்போதே குடியிருந்ததை..

இப்போது நீ எங்கே
இருப்பாயோ
எப்பிடி இருப்பாயோ
எனக்குத் தெரியாது

ஆனால் இப்போதும்
நான்
உன் நினைவோடுதான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
கற்பனையில்
என் காலங்கள்
கரைந்து
ஓடிக்கொண்டிருக்கிறது

 

அருள் நிலா வாசன்