பார்வை ஒன்றே போதுமே!கவிதை கவிக்குயில் சிவரமணி

உச்சிமுதல் உள்ளங்கால் வரை
உரசிச்செல்லும் இன்பச்சிலிர்ப்பு
இதமாய் தடவும் மயிலிறகாய்
உள்ளம் குளிரவைக்குதடி பார்வை

கண்ணக்குழியில் வீழ்ந்த பார்வை
காதலில் என்னை மூழ்க வைக்குது
சித்தம் மொத்தமும் சின்னவள் மேல்
பத்தி.எரியுதடி பார்வை

பார்க்கும் விழி நீ எனக்கு
பாவைஉனக்கு தேடல் எதற்கு
ஊடல் கூடல் எனக்காகட்டும்
உயிரும் உருக்கும் உந்தன் பார்வை

பக்கத்தில் வந்த பத்தினியே
பாலும் பழமும் ஏதுக்கடி
முக்கனிச்சுவையும் உன் விழிதனில்
வீழ்ந்ததால் சொல்கிறேன். பார்வை ஒன்றே போதுமடி.

ஆக்கம் கவிக்குயில் சிவரமணி