பின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா

பின்லாந்து தமிழர் பேரவையும், அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடமும் இணைந்து நடாத்திய நத்தார் ஒளிவிழா நிகழ்வுகள், 22/12/2019 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிறிய செபத்துடன் ஆரம்பமாகிய, ஒளிவிழா நிகழ்வில் வருகை தந்த நத்தார் தாத்தா, சிறார்களிற்கு இனிப்பு வகைகளையும் , பரிசில்களையும் வழங்கி மகிழ்வித்தார். கலைக்கூட மாணவர்களினாலும் ,ஏனைய சிறார்களாலும், பெற்றோர்கள் , ஆசிரியர்களாலும் நெறிப்படுத்தப்பட்ட, நடனங்கள் , நாடகங்கள், கவிதைகள், பேச்சுகள் என்பன மிகவும் நேர்த்தியாக அரங்கேற்றப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும், நத்தார் பண்பாடுகளை தழுவியதாக , ஜேசு பிரானின் பிறப்பின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தன. பெருந்திரளான மாணவர்கள் , சிறார்கள், பெற்றோர்கள் ஒன்றாக திரண்டிருந்து நிகழ்வுகளை குதூகலமாக கண்டு களித்தனர். ஒளிவிழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய, மாணவர்கள்,பெற்றோர்கள் , ஆசிரியர்கள், நிர்வாகிகள் , சிறார்கள், ஏனைய அனைவரையும் நன்றியுணர்வுடன் பற்றிக்கொள்கிறோம். நிகழ்வின் ஒளிப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.:

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.