பிரியமானவன்

பிரான்சில்
முதல் ஒலித்த
அறிவிப்பு குரல்..

கணீரெனும்
கம்பீரக் குரல்
உச்சரிப்பு சுத்தம்…

கவிஞர்
பாடலாசிரியர்
எழுத்தாளர்
நடிகர் இயக்குனர்.

உலக நாயகனோடு
கை கோர்த்து
நடித்த முதல் நாயகன்.
பன்முக ஆற்றல்
நிறைந்தவர்..

பணிவும் துணிவும்
நேரிடை பேசலும்
மூச்சிலும் பேச்சிலும்
கலந்த கலாச்சாரம்..

ஐரோப்பிய
ரீதியில் போட்டி
நாடக நிகழ்வுகளில்
சிறந்த நடிகன்
விருதுகளின்
சொந்தக்காரன்…

இல்லத்தரசியையும்
இணைத்து கலை
உலகை வலம் வரும்
முற்போக்காளன்..
பிள்ளைச் செல்வங்களையும்
கலைக் குடும்பத்தில்
பங்குபெற வைத்த
கலைப் பற்றாளன்..

புரட்டாத பக்கங்கள்
ஏராளம் .அறியாதோர்
அறிந்திட அறிந்தவர்கள்
எழுதுங்கள் .வாழ்த்துவோம்
என்றும் இவன் பிரியன்…

 

ஆக்கம் கவிஞர்தயாநிதி