பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

„Le Sens De La Fete“ எனும் திரைப்படத்தின் ஊடாக புலம்பெயர் ஈழத்து நட்சத்திரங்கள் பலர் பிரென்சு திரைப்பட உலகில் கால்பதித்துள்ளனர்.

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

புகழ்பெற்ற மன்மதன் பாஸ்கி, அங்கிள் சிறி உட்பட கேசவன், கிரி சுரேஸ் மற்றும் பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் திரைப்படமாக வெளிவந்த தோழா திரைப்படத்தின் மூலமான INTOUCHABLE எனும் படத்தினை இயக்கியிருந்த அவர்களே, இப்படத்தினை இயக்கியுள்ளார்.

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

பாஸ்கி அவர்கள் றோசான் எனும் பாத்திரத்தினை ஏற்று இப்படத்தில் நடித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்ரோபர் 4ம் திகதி வெளிவரவுள்ள இப்படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

பிரென்சு திரை உலகில் கால் பதித்த ஈழத்து நட்சத்திரங்கள்!

மனநிலை சோர்வாக இருக்கும் போது, ரசிகர்களின் ஆதரவும், கைதட்டல்களும் தான் எங்களை ஊக்கப்படுத்தும், உற்சாகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அத்தகையது ஒரு தருணத்தினை பரிஸ் லே ஆல் திரையரங்கின் சிறப்புத் திரையிடல் தனக்குத் தந்ததாக மன்மதன் பாஸ்கி தெரிவித்துள்ளார்.