புதுமைத் தாயாய் நீ…..

உலகின் உச்ச இறக்கம்
தாயே உன் அன்பின்
ஆளுமையே…..
எண்ணி மாளாத
புதுமையும் நீயே…..

தோல்வியும் துன்பமும்
தோளின் மீதமர்ந்த போதும்
தோள் தட்டி ஆறுதலாய்
அரவணைக்கும் 
உன் கரங்களில்
பற்றியிருக்கிறது
என் நம்பிக்கை…..

சரித்திரம் படைத்தாலும்
சரிந்து விழுந்தாலும்
சாய்ந்துறங்க
தயங்காத மடிதானே….

திசைகள் மாற்றும்
திறன் கொண்டது
உனதன்பின்
ஆஸ்திவாரங்கள்
எண்ணி மாளாது…

என் மீதான 
உன் எதிர்பார்ப்பை
அன்பெனும் கோணிப்பையின்
நூலொன்றின்
நுனிவரை பற்றியிருக்கிறேன்…..

புதுமைத் தாயாய் நீ…..

ஆக்ம் சிவலிங்கம் நாகமுத்து