புது வருடமே வா !கவிதை சுபாரஞ்சன்

 

போரோடு போராடியும்
புனித நீராடி (மருத்துநீர்)
புண்ணிய தலம்
சென்ற காலங்களுள்
தொலைகிறது மனம்………

எண்ணி எண்ணி
காத்திருந்த
காலக் கணிதத்துள்
தொலைகிறது
கை விசேஷங்கள்…….

எம்மோடு கலந்து விட்ட
அடையாளப் பண்டிகையை
எப்படித் தொலைப்பது என
எண்ணிய மனம்
துடிக்கிறது
வாழ்த்துச் சொல்ல…….

இயற்கை அலங்கரிக்கும்
இச் சித்திரையில்
இன்பத்தை அளிக்க
புது வருடமே வா என
வரவேற்கிறது மனசு……

ஆக்கம்  சுபாரஞ்சன்