புரியக் கூடியவர்க்கு.

ஏனிந்த
ஏணி.
ஏறியவரே
எஃறினர்.

படிகள்
பலவுண்டு
அடிகளில்
அவதானமிழக்கின்றார்

அடையாளம்
தந்தவரை
அழித்து முன்
சென்றவர்..
முன்னேறிட
வாய்ப்பேது.

தூரம்
அதிகம்
பயணமும்
வெகு தூரம்…

ஊரைப்
பிரித்து
வேடிக்கை
காட்டுவோர்
கவனம் கொள்ள
மறக்கின்றார்.

மூத்தவர்
பலரிங்கே
முலாம் போட்டு
நடிக்கின்றார்

நிதானம்
தவறி தினம்
அவமானம்
சுமக்கின்றார்..

நிறை
குடங்கள்
மன வாசலில்
அழகிய பதிவில்

குறை குடங்கள்
ஏறி வரும்
ஏணிகளின்
படிகளை மறத்தலாகாது.

ஏதோ
மன நெருடல்
ஏறி வந்த
பாதைகள் 
ஏன் தெரிவதில்லை.? 

கலைஞர் தயாநிதி