பூக்களைப் பாடு,,,..கவிதை கவிஞர் தயாநிதி

 

அடுத்தவன்
ஆனந்தம்
பூக்களின்
பெரும் பயன்..
வாழ்வின் எல்லை
குறிகியபோதும்
பொது அன்புக்கும்
அடையாளம்
மலர்களே..

பாவலரே
பூக்களுக்கு
பாக்களைப்
பாடுங்கள்.
மனிதப் பிறப்புக்கும்
அவன்
சிறப்புக்கும்
பூப்புனித
நீராட்டுக்கும்
தரிசனத்துக்கும்
உயர்வானதும்
மலர்களே..

வெற்றிக்கும்
மண நாளுக்கும்
முதலிரவுக்கும்
மலர் மஞ்ச
அலங்கரிப்புக்கும்
அத்தியவசியமானதும்
மலர்களே…

மனித
ஆட்டம் முடிந்து
அடக்க நகர்வின்
ஊர்வலத்துக்கும்
அனுதினம்
அர்ப்பனமாகும்
மலர்களைப் பாடுங்கள்
அதன் பிறப்பின்
மகத்துவம்
பாருங்கள்
புனிதத்தைப்
போற்றுங்கள்,,,

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken