பூக்காடானது…..கவிதை கவிஞர் தயாநிதி

மனசெல்லாம்
மத்தாப்பூ
நினைவெல்லாம்
ஊதாப்பூ…
கனவெல்லாம்
காகிதப்பூ…

அந்தி வானம்
மஞ்சள் நிறவழகியாய்
நெஞ்சம் நிறைத்திட
தஞ்சம் புகுந்தேன்
வாரி அணைத்தது,,

இன்றைய பொழுதில்
இத்தனை ஆரவாரமா
நேற்றைய பொழுதும்
நெருடித்தான் சினத்தது,
இன்றைய பொழுது
வருடியது எங்கனம்.,
,,
பரந்த வானமது
அன்பினை சொரிந்தது,
வனம் ஒன்று
நந்தவனமானது
நொந்த மனம் சிலிர்த்தது
மனமெல்லாம்
பூக்காடானது,,

ஆக்கம் கவிஞர்தயாநிதி