பூவனமாக்கலாம்..

வெளியில் வா
கண்களை திறந்து வா.
பூமியில் மாற்றங்கள்
ஏற்றங்களுமுண்டு.

நட்பில் விழு.
நாளும் எழு.
வியப்பில் வீழ்வாய்
அழுத்தம் குறை..

நற்றமிழை கொஞ்சு
செந்தமிழை சுவாசி.
பைந்தமிழில் பழகு.
சிந்தையிலே நிறுத்து.

நித்தம் நீ
நினைவில்.
சித்தமில்லை
கனவில்..

சப்தமில்லாத
நிஷப்தம்
சங்கடங்கள்
ஏதுமில்லை..

சாத்தியமாக்கு
சத்தியங்கள் நிலைக்கும்
மன முற்றத்தை
நந்தவனமாக்கு
பூவனமாக்கலாம்
வந்து விடு…