பெண்களே கவனம் விழிபாய் இருங்கள்“கவிதை கவிஞர் மயிலையூர்இந்திரன்“

அன்பாகப்பேசி நல்லவர்போல் வேசமிட்டு
பின்னாலே முன்னாலே அலைந்து
கண்பார்வையால் ஜாடைகாட்டி
வசதியாய் இருப்பதாய் வேடமிட்டு
அறியாத பெண்களையும்
அறிந்த கோதாரிகளையும்
ஏமாற்றும் வஞ்சகர் அதிகம்
ஏமாந்துவிடாதீர்கள்
மாயைக்குள் விழுந்துவிடாதீர்கள்
பலர் ஏமாந்து கண்ணீருடன்
வேதனையும் சுமையுமாய்
வாழ்கின்ற வாழ்வு வாழ்வு பாத்தேன்
பலருடன் பழகி பலர் வாழ்வை
நாசமாக்கி மனிதராய் வாழும்
மிருகங்கள் பல உண்டு
மானத்தை இழந்துவிட்டு
மதிமயங்கிப்பெண்களிடம்
போய்வந்த சேதிசொல்லி
தற்ப்பெருமை கூறுகின்றார்
மானம் இழந்து மதிப்பிழந்தவர்
உங்கள் பின்னால் ஒருவன் வந்தாலே
தாறுமாறாய்ப்பேசுங்கள்
தகப்பனிடம் சொல்லுங்கள்
கணவனிடம் சொல்லுங்கள்
மெளனமாய் நீ இருந்தால்
நாய் துரத்த வழியில்லை
கவனமாய் இருந்திடுங்கள்
இன்பமாய் வாழ்ந்திடுங்கள்
„“ விழிப்பு தொடரும்
„“ஆக்கம் கவிஞர் மயிலையூர்இந்திரன் „“