*****பேர்சூடிய பூங்குழலி *****

புது வெள்ளை இதழொன்றிலே
பூசிய கரிக்கோல் கீறலிலே பிறந்து,
பூவுலகுக்கு வந்த பேரழகி இவளோ.
புகழ் சூடிய ஓவியனே ,உந்தன்
புனை பெயரைப் பக்குவமாய்
பூவாக கோர்த்தெடுத்து ,அந்த
பூவையின் கூந்தலில் அழகாய் சூடிய
புதுமை ஓவியனும் நீதானோ. தன்
பூவரசன் நீ தானென்று அவளும்
புரிந்து கொண்ட பின்னர் தானோ
புத்துயிர் பெற்றவளாய் மெல்ல
புன்னகை மலர்களை பரிசாக
பூத்து நிற்கிறாள் தினுசாக .
பூ நேசன்