*பொட்டும் பிறையும் *கவிதை முகநேசன்

வகிடெடுத்து நீ வைத்திருக்கும்
வண்ணப்பொட்டு வட்டமா ?
வானத்தில் இட்ட திலகமந்த
வட்டநிலா தான் வட்டமா?
நிறங்கள் சேர்ந்து விரிந்து
நிற்கும் வானவில் அழகா?
நேர்த்தியாக நெற்றியிலே வளைந்து
நிற்குமுன் புருவங்கள் தான் அழகா?
ஓடித்திரிந்து கடலைக்கலக்கும் அந்த
ஓடுமீன் கயல் தான் வேகமா ?
மூடிக்கிடக்கும் அந்த இமைக்குள்
மறந்திருக்கும் உன்விழி வேகமா?
ஆக்கம்-முகநேசன்