பொன் அந்தி மாலைப் பொழுது

நீல வானம்
…………மெல்லச் சிவந்தது…
அழகு மலர்கள்
…………நாணம் சுமந்தது…
மஞ்சள் வெயிலில்
…………பூமி நனைந்தது…
சூரியக் கதிர்கள்
…………சித்திரம் வரைந்தது..!!

பட்சிகள் கூட்டம்
…………வானில் மிதந்தது…
வண்ண நிறங்கள்
…………கடலில் படர்ந்தது…
இதமான தென்றல்
…………உடலில் தவழ்ந்தது…
இதயத்தில் புதிதாய்
…………இன்பம் மலர்ந்தது..!!

வேலணையூர் ரஜிந்தன்.