போகுமிடம்….கவிதை கவிஞர் தயாநிதி

அறியாத
பயணம்
அறியாத
உலகம்…

எதுக்கான
குழப்பம்
ஏதுமில்லா
கலகம்…

நிரந்தரம்
இல்லாத வாழ்வில்
நிரந்தரமான
போர் மேகம்…
கலையாதா..

விரும்பிய
விடுதலையின்
தாகம்
தீராதா….?

ஊரான
ஊரிழந்து
வாழ்வான
வாழ்விழந்தோம்.

பேரான பேரிழந்து
அகதியெனும்
நாமம் சுமந்து
கொடும் போராலே
போகுமிடம்
புரியாமலே
போகின்றோம்
புதிய நகரம் நோக்கி…

ஆக்கம் கவிஞர்தயாநிதி