போலிகள்…கவிஞர் தயாநிதி

புரட்டிய
பக்கங்கள்
புரட்டாத
பக்கங்கள்
விருப்பமிடும்
விரும்பாமலும்
விடுகதையாகி
யோக்கியம்
ஆரோக்கியம்
நலன் கெட
நகருது முகநூல்…

உண்மையில்லை
உணர்வில்லை
போலிகளே
வேலிகளாகி
முகவரிகள்
மறைத்த திரு
முகங்களின்
மாயையில்
அர்த்தமிழக்குது
முகநூல்…

ஆற்றலுக்கு
இடமில்லை
கருத்திடுவோர்க்கு
கண்களில்லை
காணாததை
கண்ணற்றவர்
போல போலி
முகங்கள் பின்
போக்கறுந்து
போகின்றார்…

ஏமாறுவோர்
இருக்கும் வரை
ஏமாற்றுவோரும்
பெருகுவார்.
சிந்தை கருகி
சீரழிகின்றார்.
கருத்தில் கொள்ள
மறுப்போர்
காணாமல் போயிடுவார்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி