மனதில் உறுதி வேண்டும்…

கடலெழுந்து வந்தாலென்ன
காதலின்றிப்போனாலென்ன
கனமழை பொழிந்தாலென்ன
கரும்பாறைபோல் நிலையாவேன்..

கஸ்டங்கள் வந்து சூழ்ந்தாலென்ன
கவலைகள் வந்து சாய்த்தாலென்ன
குன்றைப்போல உயர்ந்து நிற்பேன்
குற்றமில்லாத மனதை சுமப்பேன்…

காலம் மாறிபோனாலென்ன
கண்ட காட்சி பொய்யானாலென்ன
கொண்ட உறுதி தளரமாட்டேன்
காற்றைக்கூட எதிர்த்துச் செல்வேன் .

கண்டும் காணாது நீ சென்றால்
கருத்தினிலும் கொள்ள மாட்டேன்
காட்டுவழிப் பயணமென்றாலென்ன
கதிகலங்கிப் போக மாட்டேன்..

கொடுந்தீயிலும் மாளாத பீனிக்ஸ்
கரை தொடாத அலைகளும் நானாவேன்
குவலயம் கண்ட எட்டயபுரத்தான்
கனவின் காதலியாவேன்
கல்லறைகள் எனை அழைக்கும் வரை..

எழுச்சியோடு மலர்ச்சியோடு்
ரதிமோகன்
ஓயாதகவியலைகள