மறந்தான் மனிதன்..

உப்பிட்டவரை
உள்ளளவும்
மறவாதே என்பதனை
நாய்கள்
மறப்பதில்லை…

ஊரழிந்து
உறவழிந்து
உற்றாரழிந்தும்
சோகம் தினம்
கவ்விட நகரும்
வாழ்வில்
நன்றியுடன் நாய்கள்.

காவலாய்
காத்திரமான
பாது காவலனாய்
வழித் துணையாகியே
கைப்பிள்ளையாய்
தொடரது காண்.

நாய் வளர்த்து
பாலை வார்த்தால்
நன்றியோடு
வாலையாட்டும்
என்றது உண்மையே.