மலர்கள் மனம் வீச

காற்றினிலே மிதந்து வந்தாள்
கால் பாதம் மறைத்து வந்தாள்

கண்ணசைவில் என்னை மயக்கி
கனவுகள் காண செய்தாள் ..

மலர்கள் மனம் வீச வந்தாள்
மனதை கொள்ளை கொண்டு சென்றாள்

மலர்க் கணைகள் தொடுக்க செய்தாள்
மோகத்துடன் கிறங்க செய்தாள் ..

தேவதையென மயங்க செய்தாள்
மயக்கம் தரவோ மறைந்து சென்றாள்

யாரென்று அறியேனே பேரென்ன என்றறியேனே
மலர்த்திரை போல் குறுங்காட்டில்

மனம் கொய்து சென்றவளே மாயங்கள் செய்தவளே
மறைந்தே என்னை வதைக்கும் வன தேவைதை தானோ நீ?

                                                                                                                   ஆக்கம் ஈழத்தென்றல்