மலர்கள்_பேசினால்.

மலரும் நினைவுகள்
மனிதனுக்கு மட்டுமா
மலர்கள் நாங்கள் பேசினால்…!
நறுமணம் வீசகிறோம்
இதமான சுகத்தை உகந்தளிக்கிறோம்
பெண்களுக்கு அழகாயொலிக்கிறோம்
இறைவனுக்கும் அர்ச்சனையாகிறோம்
கடவுள் தலையில் ஏறுகிறோம்
பிறக்கும் போதும் பரிசாகிறோம்
இறக்கும் போது அஞ்சலிக்கு மணமாகிறோம்
அசையும் காற்றுக்கு பேசும்மொழியும்
எம்மைத்தொட்டு செல்கிறதே
ஒருநாள் மலர்ந்துநாம்
மறுநாள் மடிகிறோம்
கைகளில் தவழும் நாம்
கால்களிலும் மிதிபடுகிறோம்
பேசும் மொழியறிந்தால்
புலம்பியிருப்போம்
உயிர் போகுதே என்று
இறைவனிடம் கேட்டிருப்போம்
உனக்கேன் இந்த ஓரவஞ்சனையென்று..??
மலர்கள் நாங்கள் பேசினால்
இத்தனையும் நடக்குமென்று
மானிடன் அறியாதது உண்மையே
ஜெசுதா யோ..