மீண்டும் தளிர்..

மறைக்கப்பட்டு
மறக்கப்பட்டு
போய் விடுமோ
எனும் துயர் நிலை…
தொடராதென
உரைத்திட வில்லுக்கும்
சொல்லுக்கும்
பொருள் விளக்கிட
காலம் நெருங்கிடுதே..

கலை நேசன்
கணநாதன் அருளாலே
வில்லிசை வேந்தன்
கணேஸ் தம்பையாவின்
கரங்களில் நிமிர்ந்து
நிற்கிறது வில்லு..

நாச்சிமார் கோவிலடி
ராஐன் வில்லிசையில்
அண்ணணோடு ஆயிரம்
வில்லிசைக்கு மேல் மீட்டு
தமிழீழப் பரப்பினிலே
வில்லிசை வழங்கிய
மரபு வழிக் கலைஞன்
இலங்கை வானொலி
ரூபவாகினி தொலைக்காட்சிகளில்
தோன்றி மக்கள் மனங்களை
வென்ற நம் கலைஞன்
வெற்றியுடன் ஆரம்பிக்கும்
பொன்னாள் தூரமில்லை..

அனைத்து விழாக்களிலும்
நம் பாரம்பரிகலைகள்
சுடர் விட வில்லிசைக்கு
மூச்சு கொடுப்போம்…
வாருங்கள் வாழ்த்தி வரவேற்போம்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி