முட்டாள்கள் தின வாழ்த்துகள்!கவிதை அருள் நிலா வாசன்

 

மட்டை வேலிக்குள்
மறைந்திருந்தவனை
மாடு வந்து முட்டியதால்
மண்டை கழண்டதென்று
சொன்னவனை
நம்பியது
என் முட்டாள்
தனம்

நம்பியது நடக்குமென்று
தும்பிக்கையானைத்
துதிக்கச் சொல்லி
தூபமிடக் கொட்டிய
ஒரு பக்கற்
கற்பூரத்தில் அடித்து
சத்தியம் செய்தவன்
பின்னர்
சாதகத்தில் ஏதோ
பிழையென்று
சுழையாக
சுத்த பொய்யொன்றை
என்னில் திணித்து
அத்தை மகளோடு
ஓடிப் போனவனை
நம்பியது
என்
முட்டாள் தனம்…
.
ஹ்..ம்..ம்
.
முட்டாள்கள் தின வாழ்த்துகள்
ஏப்ரல் ஒன்று.
.
ஆக்கம் அருள் நிலா வாசன்