முத்தமிழ்மாலை 2017!

முத்தமிழ்மாலை 2017!
09.06.17 வெள்ளிக்கிழமை அன்று பேர்லின் தமிழ்இளவர் ஒன்றியத்தால் 3வது தடவையாக முத்தமிழ் மாலை நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.மிகப் பிரமாண்டமான அரங்கில் ,பெருந் திரளான அவையோருக்கு மத்தியில் கோலாகலமாக பேர்லின் வாழ் இளையோர்களின் கலைத்திறன் ஆளுமைகளைக் கொண்டு இன்றைய மாலைப் பொழுது இனிதாக அரங்கேறியது.ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து தண்ணுமை இசை,பண்ணிசை,திரையிசை,பக்தி நடனம்,திரை நடனம் ,அரச,சமூக நாடகங்கள் ,பாட்டுக்குப்பாட்டு என முத்தமிழும் முதன்மை பெற அரங்கம் இன்ப வெள்ளத்தில் மிதக்க ,அறுசுவை உணவுகள் அணி சேர்த்தன.இறுதியில் மனமுவந்து வழங்கிய நல்லுள்ளங்களின் அன்பளிப்புகளால் அதிஷ்டலாபச்சீட்டிழுப்பும் இடம்பெற்று,நல்லதோர் நிகழ்வாக பலத்த பரகோசங்களிற்கு மத்தியில் முத்தமிழ் மாலை 2017 குதூகலமாய் நிறைவேறியது.இந்நிகழ்விலிருந்து நாம் எத்தனை தலைமுறை கடந்தாலும் தமிழ்க்கலைகள் அழியாது தொடரும் என்பது புலனாகிறது.மென்மேலும் இந்நிகழ்வுகள் பெரு வளர்ச்சி காண வேண்டுமென மனதார வாழ்த்துகிறோம்.
தமிழால் தரணியில் இணைந்திடுவோம்.

Merken