((((((((முன் கதை )))))))))))

வளைவு சுழிவு தெரியாத வயது அந்த
வாலிபப்பருவம், அது வாட்சாட்டமானது .
இளமைத் துடிப்பில் இயன்றவரை வாழ்வில்
இன்பத்தையே காணத்துடித்து நிற்கும் .அது
உழைத்து வாழ்ந்திடும் கடமையை பெறுகிறது.
உடன் சேர்ந்த குடும்பத்தை உயர்த்திடவே.
சளைத்திடாது பேரோடு பணம் புகழையும்,
சம்பாதித்து சாதித்து நிற்கும் தந்தையாகிறது.
களைத்து ஓய்ந்து,பின் கிழப்பருவமெய்தியே
காலத்தை வென்று நிற்கிறது , முதுமையில் .
முளைத்த செடியின் மலர்ச்சியை ரசிக்கும் நாம்
முற்றிய மரத்தின் முன்கதையை மறக்கிறோம் .
பருவ நேசன்