மூடனாய் ஆனேன்….

மழைமுகில் மை எடுத்து
மடல்தனில் வரைந்தவளே
இதயத்தை சுட்டெரிக்கும்
விழிகளை கொண்டவளே
அமுதத்தின் அருமையை
மேனியிலே பொறித்தவளே
என் காதலின் கேள்விக்கு
உன் மொனம்தான் சம்மதமோ?….

காதலே நீ எங்கிருக்கிறாய்
உன் காலடியில் உடைந்த
உள்ளத்தை இணைக்கும்படி கண்ணீரோடே கிடக்கிறேன்

துடிக்கும் என் இதயத்தின்
குருதியோ சாயமிழந்து
போகிறது..
தூங்காத என் விழிகளோ
தூங்க உன் மடி தேடி அலைகிறது
உன் மொனத்தின்
கொடூரத்தால் என் வாழ்க்கையோ
நரகத்தில் சிறைப்பட்டு இருகிறது

என் காதலே என்னவளை கொடுத்துவிடு… இன்று
உன் பார்வையில் நான் மூடனாய் ஆனேன் அன்று மௌனம்
சம்மதம் என்று எண்ணியதால்….

வன்னித் தமிழ் மறவன்…