மூன்றாம் சிறகில் காதல் அழகிய சிந்தனையில்…

காதல் ஒரு போதை
போதை உள்ள வரை
மயங்கிக் கிடக்கும் மனது
போதை தெளிந்தவுடன்
தெளிவு வரும் அதை உணர்ந்து

படிக்க படிக்க இனிமை தரும்
காதல் ஒரு அழகிய கவிதை
அதன் அர்த்தம் புரிந்தால்
வெருப்பு வரும் காதலும் ஒரு தொல்லை

காதல் என்ற ரோஜா வனத்தில்
பூக்கும் கொடி முல்லை
உறவு கொண்டு உரசி நின்றால்
குத்தும் கூர் முள்ளே

காதலும் ஒரு கலை தானே
நுணுக்கம் தெரிந்தவர் விரிக்கும்
சிலந்தி வலைதானே
சிக்கிக் கொண்டால்
தீரா துயர் தானே

வரிகள்
Rajeswari Rajes