மூன்றேழுத்தைச் சூடினேன்!

பிள்ளைக்கு பெயர் வைக்க
உன்
மூன்றேழுத்தைச் சூடினேன்
அவன் பள்ளிக்கு போகுமுன்
உன்னையும் பிரிவேனோ
இனப் போர் தந்த
பரிசாக…
குளத்தடியில்
உன் நினைவாய்
வேர்விட்ட ஆலமரம்
உன்னை நான் தேடிக்
கழைக்கும்
நேரமெல்லாம்
வேடிக்கை பார்க்கிறது …
நார் கொண்டு
பூ தொடுத்து
மரத்தடி அம்மனுக்கு
பேர் சொல்லிப்
பூசை வைத்து
ஊர்விட்டு போன
உன்
நினைவாய்
ஆல
மரத்தடியில்
தினமும் நான்
வந்து
வந்து போவதுதான்
மரத்துக்கும்
துக்கம் ….
மழையோடு சேர்ந்து
மௌனமாய் அழுகிறது
நான் பாட கேட்டு….
அருள்நிலா வாசன்