“மெய் வெளி” நாடகப் பயிலக ஆரம்ப விழா!

நாடகக்கலையை எமது அடுத்த சந்ததிக்கு பரீட்சயமாக்கவும், அதன் சுவையை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் நாம் ஒரு அரங்கியல்
பாடசாலையை ஆரம்பித்திருக்கிறோம்.
முறையான அரங்கப் பயிற்சியும், அரங்கியல் அனுபவமும் நேர்த்தியான நாடகங்களை எமது சமுகத்துக்கு தரவல்லது என்ற நோக்கில் அரங்கின் பல மூலக்கூறுகளையும் இளையவர்களுக்கு பரீட்சயமாக்க இந்த பயிலகம் உதவ இருக்கின்றது.

எதிர்வரும் 02.02.2019 அன்று சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு நடைபெறும் எமது பயிலக ஆரம்ப விழாவிற்கான தங்கள் வருகை, மாணவர்களை ஊக்கப்படுத்தும் என்று திடமாக நம்புவதோடு தங்களை நிகழ்வுக்கு அன்புடன் அழைத்தும்
நிற்கின்றோம்.

அன்புடன்,
சாம் பிரதீபன்
இயக்குனர்
“மெய் வெளி” நாடகப் பயிலகம்