யாழ்.தமிழ்ச்சங்கம் கிளிநொச்சியில் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 17.07.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
.
நிகழ்வில் வரவேற்புரையை யாழ். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தனித்தமிழ் ஆர்வலர் நா.வை. குமரிவேந்தனும் சிறப்புரைகளை கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் தி.யோண்குயின்ரஸ், யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோரும் ஆடிப்பிறப்பின் சிறப்புக் குறித்த உரையை யாழ். தமிழ்ச்சங்;கப் பெருந்தலைவர் தகைசார் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாசும் நன்றியுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் கரைச்சிப் பிரதேச கலாசார உத்தியோகத்தருமாகிய கு.ரஜீபனும் ஆற்றினர்.
.
கிளிநொச்சி கல்வி வலயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு கரிகணன் நிறுவனத்தாரால் நாவலர் திருவுருவச் சிலைகள் வழங்கப்பட்டன.
.

நிகழ்வில் மகாதேவ சிறுவர் இல்லப்பிள்ளைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன

Merken