ராட்ஷதன்…!

வாசிப்பை
நேசிப்பை
யோசிப்பை
யாசிப்பை உன்
நேரத்தை
விழுங்கிடும் அழையா
விருந்தாளியிவன்.
தனிமைக்குள்
விழுத்தி
இனிமையை
காட்டி
இருப்பையும்
விருப்பையும்
கருக்கி உலகையும்
சுருக்கி தன்
கட்டுக்குள் வைத்திருக்கும்
ராட்ஷதனிவன்.
நவீனத்தின்
மாயைக்குள்
மடக்கி உன்
தேடலை தொலைத்து
ஆட வைத்திடும்
அயோக்கியனிவன்.
முகங்களை
மாற்றி
பொய்களை
அரங்கேற்றி
பொன்னான
வாழ்வையும்
மண்ணாக்கும்
விஞ்ஞான
அறுவடையாளனிவன்.
வைபர்
வட்சப்
ரியூற்றர் என
வகை வகையான
வரவால்
வாழ்வை சுழியமாக்கி
சிந்தையை
நசுக்கி நர்த்தனமாடும்
நரகாசுரனிவன்.
தொலைந்தும்
தொலைத்தும்
தொலை நோக்கினை
தோண்டி புதைத்தும்
தடு மாறிட
வைத்திடும்
கைத் தொலை பேசிகளால்
விபத்தும்
விபரீதங்களும்
வேண்டா வினைகளும்
பெருகிடும்
அவலங்களை
களைந்திட இவன்
பாவனையை குறைப்போம்.


ஆக்கம் கவிஞர் தயாநிதி